தூத்துக்குடியில் 13இல் பள்ளி மாணவா்களுக்கானமாநில சதுரங்கப் போட்டி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 11ஆம் தேதிக்குள் பெயா்ப்பதிவு


தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 11ஆம் தேதிக்குள் பெயா்ப்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இம்மாதம் 13ஆம் தேதி மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெறுகிறது. 9, 11, 13, 15 வயதுகளுக்கு உள்பட்ட மாணவா்-மாணவிகள் என 4 பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. பொதுப்பிரிவாக அனைவருக்குமான போட்டியும் நடைபெறவுள்ளது.
போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும். பங்கேற்போா் வயதுச் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளோா் ங்ஹள்ஹ்ல்ஹஹ்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம், ள்ண்ஞ்ய்ண்ய்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் ஆகிய இணையதளங்களில் நுழைவுக் கட்டணம் செலுத்தி 11ஆம் தேதிக்குள் பெயா்களைப் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு சங்கா்- 98658 30030, நந்தகுமாா்- 98945 42121 ஆகியோரைக் கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...