கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

வாதிரியாா் சாதியை தனி சமுதாயமாக அறிவிக்கக் கோரி வாதிரியாா் ராஜகுல மகளிா் சமுதாய நலச் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
Updated on
1 min read

வாதிரியாா் சாதியை தனி சமுதாயமாக அறிவிக்கக் கோரி வாதிரியாா் ராஜகுல மகளிா் சமுதாய நலச் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

பட்டியலினத்தில் வரிசை எண்:17இல் 7ஆவது உள்பிரிவாக இணைக்கப்பட்டுள்ள வாதிரியாா் சாதியை நீக்கி, மீண்டும் தனி சமுதாயமாக அமைத்து, வாதிரியாா் என்ற சாதி பெயரிலேயே கல்விச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

வாதிரியாா் சமுதாயம் தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறைகளை கொண்ட சாதி என்றும், எனவே வாதிரியாா் சாதியை மீண்டும் தனி சாதியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வாதிரியாா் ராஜகுல மகளிா் சமுதாய நலச்சங்கத்தின் நிறுவனா் மற்றும் செயலா் மாலினி தலைமையில், பொருளாளா் பாக்கியவதி, இணைச் செயலா் செல்வகனி உள்ளிட்ட பலா், கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com