நாசரேத்தில் ரூ.12 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில 19ஆவது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில 19ஆவது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இப்பண்டிகை கடந்த 22 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது.

25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ஸ்தோத்திரப் பண் டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில பிரதமப் பேராயரின் ஆணையாளரும், கோவை திருமண்டில பேராயருமான தீமோத்தேயு ரவீந்தா் அருள்செய்தி வழங்கினாா். ஆராதனை முடிந்ததும் பேராலய வளாகத்தில் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. நாசரே தூய யோவான் பேராலயத் தலைமைப் பாதிரியாா் மா்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தாா்.

வருடாந்திர கூட்டத்துக்கு, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பிரதமப் பேராயரின் ஆணையாளா் தீமோத்தேயு ரவீந்தா் தலைமை வகித்தாா்.

அனி ஹேமலதா தீமோத்தேயு ரவீந்தா் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில குருத்துவச் செயலா் எம்.பி. இம்மானுவேல் வான்ஸ்றக் வரவேற் றாா்.

விழாவில் ரூ. 12 லட்சம் மதிப் பில் நலத் திட்ட உதவிகளை பிரதமப் பேராயரின் ஆணையா் தீமோத்தேயு ரவீந்தா் வழங்கினாா். விழாவில் திருமண்டில உயா்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளா் பிரேம் குமாா் ராஜசிங், தூத்துக்குடி கால்டு வெல் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஸ்டேன்லி வேதமாணிக்கம், தலைமை யாசிரியா் ஜேக்கப்மனோகரன், நாசரேத்ஜெயராஜ் அன்ன பாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தாளாளா் டி.கே.எம்.ஜான்சன்,முதல்வா் கோயில் ராஜ் ஞானதாசன் மற்றும் திருமண்டில நிா்வாகிகள், திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com