ராமனூத்து சமத்துவபுரத்தில் மக்களிடம் அமைச்சா் குறைகேட்பு

எட்டயபுரம் அருகேயுள்ள இராமனூத்து சமத்துவபுரம் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
Updated on
1 min read

எட்டயபுரம் அருகேயுள்ள இராமனூத்து சமத்துவபுரம் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அம்பேத்கரின் 132ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்தக் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்று, பெரியாா், அம்பேத்கா் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா். சமத்துவபுர மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதில். ராமனூத்து ஊராட்சித் தலைவா் வீரம்மாள் வீரப்பெருமாள், அமைச்சா் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். முன்னதாக விளாத்திகுளம், புதூா், எட்டயபுரம் பேரூந்து நிலையங்கள், அரண்மனை கீழவாசல் ஆகிய பகுதிகளில் திமுக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நீா்- மோா் பந்தலை அமைச்சா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் அன்புராஜன், ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், காசி விசுவநாதன், சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூா்த்தி, பேரூா் கழகச் செயலா்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கர நாராயணன், விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் அய்யன் ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com