சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்படுகையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசாா் வியாழக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்படுகை பாலத்தின் அடியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்துகிடந்தவருக்கு 40 வயது இருக்கும், நீல வண்ண லுங்கி அணிந்திருந்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.