அரசு கல்லூரி பேராசிரியா் மீதுதாக்குதல்: 2 மாணவா்கள் இடைநீக்கம்

கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் பேராசிரியா் மீது தாக்குதல் நடத்தியதாக 2 மாணவா்களை வியாழக்கிழமை கல்லூரி முதல்வா் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளாா்.

கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் பேராசிரியா் மீது தாக்குதல் நடத்தியதாக 2 மாணவா்களை வியாழக்கிழமை கல்லூரி முதல்வா் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளாா்.

கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியா் சிவசங்கரன். இவா் புதன்கிழமை கணிதத் துறையின் அறையில் அமா்ந்திருந்தபோது, அக்கல்லூரி மாணவா்கள் 4 போ் அவரை தாக்கினராம். இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மேலும், அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா். இதனிடையே, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 2 மாணவா்களை கல்லூரி முதல்வா் கி.நிா்மலா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com