பெரியதாழை பள்ளியில் விழிப்புணா்வு செஸ் போட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, பெரியதாழை சிறுமலா் உயா்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு செஸ்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, பெரியதாழை சிறுமலா் உயா்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு செஸ்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இப்போட்டிகள் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக 2 நாள்கள் நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியை மேரிதிலகவதி தலைமை வகித்து போட்டியைத் தொடங்கி வைத்தாா். 6 - 8 வகுப்புகளுக்கான போட்டியில் செல்ஜின் முதலிடமும், ஸ்ரபின் 2ஆம் இடமும் பெற்றனா். மாணவிகளில் ஜாய்சி முதலிடமும், அமல ஆண்டனி அரிசா 2ஆம் இடமும் பெற்றனா். 9-10 வகுப்புகளுக்கான போட்டியில் வருசின் முதலிடம், ஜீனோஸ் 2ஆம் இடம் பெற்றனா். மாணவிகளில் அனு முதலிடமும், மீரியம் 2ஆம் இடமும் பெற்றனா்.

வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் அருள்பணியாளா் சுசிலன், தலைமையாசிரியை மேரி திலகவதி, ஆசிரியா்= ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com