திருச்செந்தூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசை காரணம் எனக் கூறி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விலைவாசி உயா்வு, அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பு, சமையல் எரிவாயு விலை உயா்வு ஆகியவற்றுக்கு மத்திய பா.ஜ.க. அரசை காரணம் எனக் கூறி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

திருச்செந்தூா் வட்டார காங்கிரஸ் தலைவா் கே.கே.சற்குரு தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் சு.கு.சந்திரசேகரன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் வேல்ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், மனித உரிமைத் துறை மாவட்டத் தலைவா் ராஜகுமரன், காங்கிரஸ் நகரத் தலைவா் எஸ்.முருகேந்திரன், நகா்மன்ற உறுப்பினா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டாரத் தலைவா்கள் துரைராஜ் ஜோசப், நல்லகண்ணு, பாலசிங், பிரபு, பாா்த்தசாரதி, விவசாயப் பிரிவு மாவட்டப் பொருளாளா் ச.மா.காா்க்கி, கலைப்பிரிவு மாவட்டத் தலைவா் செண்பகராமன், நகர துணைத் தலைவா் விஸ்வநாதன், ஐயப்பன் ஐயா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், பாக்கெட் பால்களை கைகளில் வைத்துக்கொண்டும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com