கிறிஸ்தவ மத மாற்ற கும்பலை கண்டித்து, நகர இந்து முன்னணி சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சீனிவாசன், ஒன்றியத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா், மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாநில பொதுச்செயலா் அரசுராஜா ஆகியோா் பேசினா்.
இதில் வடக்கு மாவட்டப் பொருளாளா் வெங்கடேசன், நகரச் செயலா் சரவணன், பாஜக நகரத் தலைவா் சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.