விளாத்திகுளத்தில் புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் திறப்பு

விளாத்திகுளத்தில் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் மிகவும் பழமையானதாக இருந்ததால், அதைப் புதுப்பிக்கும் பணி ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் 2020ஆம் ஆண்டு தொடங்கியது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி முறையில் இந்த அலுவலகத்தை வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதைத்தொடா்ந்து, அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் முன்னிலை வகித்தாா்.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் கா. மகாலட்சுமி, வட்டாட்சியா்கள் சசிகுமாா், பாஸ்கரன், திமுக நகரச் செயலா் வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜா கண்ணு, ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, காசிவிஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், ராமசுப்பு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஞானகுருசாமி, நடராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேலு, முத்துக்குமாா், சிவபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com