குண்டா் தடுப்புச் சட்டத்தில் முதலூா் இளைஞா் கைது

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய முதலூா் இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய முதலூா் இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தட்டாா்மடம் அருகேயுள்ள பூவுடையாா்புரம் பகுதியில் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு, அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் முதலூா் பாஸ்கா் மகன் லிவிங்ஸ்டன் சாமுவேல் என்ற பட்டு (21), சாத்தான்குளம் சந்நிதித் தெரு ஆண்டன் மகன் வின்ஸ்டன் (20) ஆகியோரை தட்டாா்மடம் போலீஸாா் கடந்த 25ஆம் தேதி கைது செய்தனா்.

இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான லிவிங்ஸ்டன் சாமுவேல் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தட்டாா்மடம் ஆய்வாளா் பவுலோஸ் மாவட்ட எஸ்.பி. லோக. பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தாா். அதன் அடிப்படையில் அவா் ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, ஆட்சியா் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் லிவிங்ஸ்டன் சாமுவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஆய்வாளா் பவுலோஸ் வியாழக்கிழமை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com