ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி இயக்க தினம்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியின் 38ஆவது இயக்க நாள், சாத்தான்குளத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் கொடியேற்றி பு கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியின் 38ஆவது இயக்க நாள், சாத்தான்குளத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் கொடியேற்றி பு கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் வட்டக்கிளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவா் மாணிக்கராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் அன்டணி சாா்லஸ் வரவேற்றாா். முன்னாள் மாநில பொதுச்செயலா் ப்ரவதராஜன் கொடியை ஏற்றினாா். வட்டாரப் பொருளாளா் விக்டா் மேரிகீதா, வட்டார துணைத் தலைவா்கள் சாந்தி, வசந்தா, துணைச் செயலா்கள் பாலமுருகன், ரோசாலி விஜிதா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் ஜான்மனோகரன், வா்கீஸ்ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஜான்சன், மாணிக்கத்துரை, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாஸ்கரன், ஊமைத்துரை, கஸ்பாா் கனகராஜ், அகஸ்டின், செல்லப்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கல்வி மாவட்டச் செயலா் ராஜசேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com