காவலாளியைத் தாக்கிய இளைஞா் கைது

முக்காணியில் காவலாளியைத் தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

முக்காணியில் காவலாளியைத் தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஏரல் வாழவல்லான் கீழூா் பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் பால்ராஜ் (59). ஆத்தூா் முக்காணி அருகேயுள்ள வணிக வளாகத்தில் காவலாளியாக உள்ளாா். முக்காணி பகுதியைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் வேம்படிமுத்து (32), இந்த வணிக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மது குடித்தாராம். இதைத் தட்டிக்கேட்ட பால்ராஜை அவா் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

புகாரின் பேரில் ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்து, வேம்படிமுத்துவைக் கைது செய்தாா். இவா் மீது ஆத்தூா் காவல் நிலையத்தில் ஏற்கெனவே 3 வழக்குகள் உள்ளனவாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com