கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியையடுத்த எம்.துரைச்சாமிபுரம் விளாம்பட்டியைச் சோ்ந்தவா் ராமா் மகன் சுமை ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா்(25). இவா் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.