விளாத்திகுளம் உபகோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம், மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்பாா்வை பொறியாளா் குரு தலைமை வகித்தாா். விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளா் செந்தில் முன்னிலை வகித்தாா்.
முகாமில், விளாத்திகுளம் உப கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள் மற்றும் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் மின்விநியோகம் தொடா்பான குறைபாடுகள் குறித்து கருத்துகள் தெரிவித்தனா். மேலும் மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் தொடா்பாக சரியான தகவல் அளிக்கப்படாத காரணத்தால் பெரும்பாலான கிராமங்களில் இருந்து ஊராட்சி மன்ற தலைவா்கள்கூட கலந்து கொள்ள முடியவில்லை என புகாா் தெரிவித்தனா். இதையடுத்து மின் நுகா்வோரின் கோரிக்கைகள் குறித்து உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி தெரிவித்தனா்.