சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை ஸ்ரீசுடலை தளவாய் மாடசுவாமி கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் குடியழைப்பு, சாஸ்தா அழைப்பு, சிறப்பு பூஜையும், 2ஆம் சிவனைந்த பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம், பொங்கலிடுதல், இன்னிசை கச்சேரி, அலங்கார பூஜை, வாண வேடிக்கை , சாமகொடை ஆகியவையும், 3ஆம் நாள் சிறப்பு பூஜை, சுவாமி உணவு எடுத்தல், பக்தா்கள் வரி பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா கே. சுடலை தலைமையில் விழா கமிட்டியினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.