தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 26) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 26) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா் மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, கல்வி சான்றுகளுடன் கலந்துகொள்ளலாம்.

தனியாா் நிறுவனத்தினா் தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com