கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற மின் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையைச் சோ்ந்த செண்பகம் மகன் ஆறுமுகம்(73). உடல்நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவியை உடனிருந்து கவனித்து வருகிறாா். இந்நிலையில், மா்மநபா்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், தங்கக் கம்மல், தங்க பிஸ்கட்களை திருடிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து ஆறுமுகம் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.