வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு இம்மாதம் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியா் செ.சுசிலா விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் வாக்காளரை உறுதி செய்யவும், வாக்காளா் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தவிா்க்கும் வகையில் வாக்காளா்களின் சுய விருப்பத்தின் பேரில், ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இப்பணியானது இம்மாதம் 1ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களால் வீடுகளுக்குச் சென்று ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இம்மாதம் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி அலுவலா்களால் இப்பணி நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் இணையதளங்களின் மூலம் இணையவழியில் படிவம் உள்ளீடு செய்து ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். கைப்பேசி செயலி மூலம் ஆதாா் எண்ணை இணைக்கலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.