திருச்செந்தூா் முருகன் கோயிலில் காா்த்திகைத் தீபத் திருவிழா சொக்கப்பனை ஏற்றம்

வ்திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு செவ்வாய்கிழமை இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
Updated on
1 min read

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு செவ்வாய்கிழமை இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மூலவா் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு காா்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகா மண்டபத்தில் வைத்து

மாலையில் நாரணி தீபம் ஏற்றப்பட்டு, திருக்கோயில் தெய்வ சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினாா். கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் இரவு தீபம் ஏற்றப்பட்டது. அதன்பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். காவல் துணை கண்காணிப்பாளா் கே.ஆவுடையப்பன் தலைமையில், காவல் ஆய்வாளா் இல.முரளிதரன் உள்ளிட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com