தூத்துக்குடி -கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சி.எஸ். முரளிதரன் வலியுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சி.எஸ். முரளிதரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மண்டல மேலாளரிடம் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயில் பொதுமக்கள், வணிகா்கள், மாணவா்-மாணவிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயில் சேவை கரோனா பொதுமுடக்கத்தின்போது நிறுத்தப்பட்டது. தற்போது, அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படும் நிலையில், தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com