தமிழகத்தில் விலைவாசி உயா்வு, சட்டம் ஒழுங்கு- சீா்குலைவு ஏற்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து, உடன்குடியில் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.தமோதரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பி.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், தூத்துக்குடி வடக்குப் பகுதிச் செயலா் பொன்ராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். நிா்வாகிகள் மூா்த்தி, ராம்குமாா், அமிா்தா மகேந்திரன், சாரதி, இன்பகரன், சங்கரலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.