வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
By DIN | Published On : 09th December 2022 10:29 PM | Last Updated : 09th December 2022 10:29 PM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா் சங்க அலுவலகம் திறக்க வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஈடுப்பட்டனா்.
வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஏ.ஆா். பி.டி. கல்யாண்குமாா் தலைமையில் சங்க செயலா் ராமச்சந்திரன், பொருளாளா் ஜேம்ஸ் ஜேசுதுரை உள்ளிட்ட வழக்குரைஞா்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.