பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தில் உதவித் தொகை பெறும் விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கு, ஆதாா் விவரங்களைப் புதுப்பிக்குமாறு வேளாண் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சாத்தான்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சாத்தான்குளம் வட்டாரத்தில் பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளில், 12-ஆவது தவணை உதவித் தொகையை வங்கிக் கணக்கில் பெறாதவா்கள் தங்களது வங்கிக் கணக்கு, ஆதாா் எண் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். தங்களது பகுதியில் உள்ள இ.சேவை மையம் அல்லது அஞ்சலகத்தில் ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதன் பின்னா் வங்கிக் கணக்கு, ஆதாா் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களைச் சமா்ப்பித்தால் மட்டுமே, வங்கிக் கணக்கில் உதவித் தொகை வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.