குரும்பூா் அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு சாமிநகரை சோ்ந்தவா் இசக்கி மகன் ஆறுமுகம்(24). இவா், குரும்பூா் அருகே உள்ள குரங்கன்தட்டு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குரும்பூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று ஆறுமுகத்தைப் பிடித்து, அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.