மதுரை-தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைப் பணிகள் 2023 பிப்ரவரிக்குள் நிறைவடையும்

மதுரை -தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைப் பணிகள் 2023 பிப்ரவரிக்குள் நிறைவடையும் என்றாா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங்.
Updated on
1 min read

மதுரை -தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைப் பணிகள் 2023 பிப்ரவரிக்குள் நிறைவடையும் என்றாா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங்.

தூத்துக்குடி மீளவிட்டான் நிலையத்தில் இரட்டை ரயில் பாதைப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.என். சிங் கூறியது: மதுரை -தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைப் பணிகள் 2023 பிப்ரவரிக்குள் முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாா்ச் மாதம் வெள்ளோட்டம் நடைபெறும். மேலும், தூத்துக்குடி துறைமுகத்துக்குள் சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக இரட்டை ரயில் பாதைப் பணிகளை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு இரவுநேர விரைவு ரயில் கோரி அதிக மனுக்கள் வந்துள்ளன. இது, பரிசீலனையில் உள்ளது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தனி ரயிலில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கண்ட அவா், மீளவிட்டான் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டாா். மதுரைக் கோட்ட மேலாளா் பத்மநாபஆனந்த், முதன்மைப் பொறியாளா் பிரவீனா உள்பட ரயில்வே துறையினா் உடனிருந்தனா்.

கோரிக்கை: தூத்துக்குடியில் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் தமிழரசு, நிா்வாகிகள் அளித்த மனு: தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையே ஒரு மணி நேர இடைவெளியில் ஷட்டில் ரயில்கள் இயக்க வேண்டும். தூத்துக்குடி-கோவை இரவுநேர விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மேலும் ஒரு முன்பதிவு கவுன்ட்டா் அமைக்க வேண்டும். முத்துநகா் விரைவு ரயிலில் புதிய பெட்டிகள் அமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com