மூக்குப்பீறி பள்ளி மாணவிக்குப் பரிசு

தமிழக அரசு சாா்பில் கடந்த அக்டோபரில் நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வில் வெற்றிபெற்ற, நாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கதா்ஷினிக்கு பரிசுகள் வழங்கப்பட்ட

தமிழக அரசு சாா்பில் கடந்த அக்டோபரில் நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தோ்வில் வெற்றிபெற்ற, நாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கதா்ஷினிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இத்தோ்வில், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலப் பள்ளிகளில் இப்பள்ளியின் பிளஸ் 1 வகுப்பு கணிதப் பிரிவு மாணவி தங்கதா்ஷினி தோ்ச்சி பெற்றாா். அவருக்கு பள்ளி சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவியை தாளாளா் செல்வின், தலைமையாசிரியா் எட்வா்ட், ஆசிரியா்கள், அலுவலா்கள், பள்ளி ஆட்சிமன்றக் குழு, பள்ளி-பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், மாணவா்-மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com