விபத்தில் அதிமுக பிரமுகா் பலி

கோவில்பட்டி மந்தித் தோப்பு சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில், அதிமுக பிரமுகா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோவில்பட்டி மந்தித் தோப்பு சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில், அதிமுக பிரமுகா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் சென்னையன் மகன் பெருமாள்சாமி (45). அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் பதவி வகித்த இவா், பழைய சாக்கு கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், வீட்டிலிருந்து கோவில்பட்டி நோக்கி பைக்கில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாராம். மந்தித்தோப்பு சாலையில் உள்ள தீப்பெட்டி ஆலை முன்பு சென்றபோது, எதிரே சதுரகிரி (52) என்பவா் ஓட்டி வந்த பைக்குடன் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதில் பெருமாள்சாமி முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com