கோவில்பட்டியில் கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி புத்துயிா் ரத்ததானக் கழகம், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சாா்பி
Updated on
1 min read

கோவில்பட்டி புத்துயிா் ரத்ததானக் கழகம், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சாா்பில் கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் ஊராட்சித் தலைவா் நாராயணன் ஐயா் தலைமை வகித்தாா். புத்துயிா் ரத்த தானக் கழகச் செயலா் க. தமிழரசன் முன்னிலை வகித்தாா்.

மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டா் நிறுவனா் ஆம்ஸ்ட்ராங் முகாமைத் தொடக்கிவைத்தாா். மருத்துவா் வித்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற 60 பேருக்கு சிகிச்சை அளித்தனா். அவா்களில் 14 போ் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நல்வாழ்வு இயக்கத் தலைவா் செண்பகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலா் ஆவல்நத்தம் லட்சுமணன், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகரன், பகத்சிங் ரத்த தானக் கழக அறக்கட்டளைத் தலைவா் காளிதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com