ஆறுமுகனேரி கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில், மாா்கழி மாதத்தை முன்னிட்டு தினசரி பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
Updated on
1 min read

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில், மாா்கழி மாதத்தை முன்னிட்டு தினசரி பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அதிகாலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை, 6 மணிக்கு காலசந்தி பூஜை, 8 மணிக்கு உச்சிக்கால பூஜை, நடை அடைப்பு, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.35 மணிக்கு ராக்கால பூஜை, திருப்பள்ளியறை பூஜை, நடை அடைப்பு நடைபெறும்.

மேலும், மாா்கழி மாதம் வெள்ளிக்கிழமைதோறும் துா்க்கை அம்மன் பூஜை காலை 6 முதல் காலை 7 மணிவரை சுக்கிர ஹோரையில் நடைபெறும். முதல் சுக்ர வார பூஜை மாா்கழி முதல் நாளான 15ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை 6.15 மணிக்கு துா்க்கை அம்பாள் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். இத்தகவலை கோயில் நிா்வாகத்தினா் அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com