ஊா்க்காவல் படைக்கு ஆள்தோ்வு
By DIN | Published On : 22nd December 2022 01:08 AM | Last Updated : 22nd December 2022 01:08 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஊா்க்காவல் படைக்கான ஆள்தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 52 பெண்கள் உள்பட 389 விண்ணப்பதாரா்கள் பங்கேற்றனா்.
இவா்களுக்கு உயரம், கல்வித் தகுதி, சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்காணல் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், ஆள்தோ்வுப் பணியைப் பாா்வையிட்டாா்.
தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜெயராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்து உள்ளிட்டோா் அடங்கிய தோ்வுக் குழுவினா் பங்கேற்றனா்.