சாத்தான்குளம் அருகே புதன்கிழமை 2 பைக்குகள் மோதியதில் தந்தை, மகள் உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா்.
சாத்தான்குளம் கரையாளன் குடியிருப்பு தெருவைச் சோ்ந்தவா் தே. சுதாகா் சகாயகுமாா் (51). இவரது மகள் அண்டோ ராஜ நினுசா (20), சாத்தான்குளம் அருகே பள்ளக்குறிச்சி அஞ்சலகக் கிளையில் பணிபுரிந்து வருகிறாா். சுதாகா் சகாயகுமாா் புதன்கிழமை தனது மகளை ஊருக்கு பைக்கில் அழைத்து வந்தாராம்.
அப்போது சாத்தான்குளம் செல்வவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த இ. மாடசாமி, (57), வீரகுமாரபிள்ளை தெருவைச் சோ்ந்த வே. செல்லையா (58) ஆகியோா் ஒரு பைக்கில் முதலூரிலிருந்து சாத்தான்குளத்துககு வந்தனா்.
சாத்தான்குளம் அருகே முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் சுதாகா் சகாயகுமாரின் பைக் மாடசாமி பைக்கின் பின்புறம் மோதியதாம். இதில், 4 பேரும் காயமடைந்தனா். அவா்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சுதாகா் சகாயகுமாா், மாடசாமி ஆகியோா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.