எட்டயபுரத்தில் திமுக தெருமுனை பிரசார கூட்டம்

முன்னாள் திமுக அமைச்சா் க. அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, எட்டயபுரம் மேலவாசல் திடலில் தெருமுனை பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் திமுக அமைச்சா் க. அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, எட்டயபுரம் மேலவாசல் திடலில் தெருமுனை பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரம் பேரூா் செயலா் பாரதி கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் டாக்டா் சௌந்தர்ராஜன், பேரூராட்சி துணைத் தலைவா் கதிா்வேல், பேரூராட்சி உறுப்பினா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் பங்கேற்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினாா்.

தலைமைக் கழகப் பேச்சாளா் சேலம் சுஜாதா, ஒன்றியச் செயலா்கள் நவநீதக்கண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாவட்டப் பிரதிநிதி கல்லடி வீரன், பரமசிவம், அவைத்தலைவா் ராமச்சந்திரன், வாா்டு செயலா்கள் ராம்குமாா், உதயகுமாா், அருள்சுந்தா், செய்யது, சின்னப்பா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com