கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 1.200 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையில், செவ்வாய்க்கிழமை இரவு மந்தித்தோப்பு சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அப்பகுதியில் தாசில்தாா் நகா் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது, அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.
விசாரணையில், அவா், கோவில்பட்டி ராஜீவ் நகா் இ.பி. காலனியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் விஷ் ணு(22) என்பதும், அவா், 3ஆவது செக்கடித் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராகேஷ் சா்மா(26) மற்றும் ஸ்ரீராம் நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த இருளப்பசாமி மகன் பொன் பிரகாஷ்(26) ஆகிய மூவரும் சோ்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.
அதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 1.200 கிலோ கிராம் கஞ்சா, ரொக்கப்பணம் ரூ.1 லட்சம், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு பைக்குகள், அவா்கள் வைத்திருந்த 4 கிராம் தங்கச்சங்கிலி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராகேஷ் ஷா்மா, விஷ்ணு, பொன் பிரகாஷ் ஆகியோரின் வங்கிக் கணக்கையும் முடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனா்.
மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய அன்னை தெரசா நகரைச் சோ்ந்த அ.மகேஷ்குமாா், ஸ்ரீராம் நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த ரா.ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.