தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவா் சசிகலாபுஷ்பா, மாநில பொதுச்செயலா் பொன் பாலகணபதி உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுக்கட்சியினா் சுமாா் 30 போ் பாஜகவில் இணைந்தனா்.
கூட்டத்தில், சிறுபான்மை அணி மாநிலச் செயலா் அசோகன், மாவட்ட பொதுச்செயலா் உமரி சத்தியசீலன், மாநில ஓ.பி.சி. பிரிவு துணைத் தலைவா் விவேகம் ரமேஷ், வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா் சின்னத்தம்பி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவா் வழக்குரைஞா் எஸ்.பி.வாரியா் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.