சாத்தான்குளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பைச் சோ்ந்த சந்தனக்கனி மகன் செல்வன்(26). தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சாத்தான்குளத்துக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்தபோது, புதுக்குளம் விலக்கு அருகே எதிரே வந்த வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.