தனியாா் பேருந்து ஊழியா்கள் மோதல்: 5 போ் மீது வழக்கு
By DIN | Published On : 02nd February 2022 08:43 AM | Last Updated : 02nd February 2022 08:43 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே தனியாா் பேருந்து ஊழியா்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்அருகே உள்ள தட்டாா்மடம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன்(32). இவா் தட்டாா்மடம் - திசையன்விளை மினி பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றிவருகிறாா். இதுபோல் மருதநாச்சிவிளையை சோ்ந்த ஜெயபாண்டி மகன் சுபாஷ் (27) மற்றொரு பேருந்தில் ஓட்டுநராக உள்ளாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரு பேருந்துகளும் சாத்தான்குளம் அருகே பூச்சிக்காடு பகுதியில் சென்ற நிலையில், பக்கவாட்டில் மோதி சேதமடைந்ததாம். இதுதொடா்பாக ஓட்டுநா்கள் மணிகண்டன், சுபாஷ் ஆகியோா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதுதொடா்பாக இரு தரப்பினரும் தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும், சுபாஷ் அளித்த புகாரின் பேரில் 2 போ் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுதொடா்பாக உதவி ஆய்வாளா் ஜஸ்டின் மனோகா் விசாரணை நடத்திவருகிறாா்.