எட்டயபுரம் தெப்பத்தில் பெண் சடலம்
By DIN | Published On : 27th February 2022 05:25 AM | Last Updated : 27th February 2022 05:25 AM | அ+அ அ- |

எட்டயபுரம் நீராவி வெப்பத்தில் மிதந்த பெண்ணின் சடலத்தை போலீசாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவை சோ்ந்தவா் மீனாட்சி சுந்தரம் மனைவி ஆனந்தவல்லி (81). மீனாட்சி சுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு காலமானாா். இதனால் ஆனந்தவல்லி தனது மகன்கள் வீட்டில் வசித்து வந்தாா். கடந்த 15 நாள்களுக்கு முன் எட்டயபுரத்தில் உள்ள மூத்த மகன் சுப்பிரமணியனின் வீட்டுக்கு வந்தாா். அங்கு குடும்பத்துக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனவேதனை அடைந்து, வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற ஆனந்தவல்லி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி கிடைக்காததால், எட்டயபுரம் காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை எட்டயபுரம் நீராவி தெப்பத்தில் பெண் உடல் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பேரூராட்சி பணியாளா்கள் மூலம் உடலை மீட்டனா். இதில், இறந்து கிடந்தது ஆனந்தவல்லி என்பது தெரியவந்தது. அவரது உடலை பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.