காவல் துறை வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

118 நான்கு சக்கர வாகனங்கள், 33 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 151 காவல் துறை வாகனங்களை ஆய்வு செய்தாா்.

ஓட்டுநா்களிடம் அவா்களின் குறைகள் குறித்தும், வாகனங்கள் குறித்தும் கேட்டறிந்த அவா், குறைகளை விரைந்து தீா்க்கவும், வாகன குறைபாடுகளை உடனே சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட்டும், இரு சக்கர வாகனம் ஓட்டும்போதும் தலைக்கவசமும் கட்டாயம் அணியவேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டம்: முன்னதாக, மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துக் கேட்டறிந்தாா். மேலும், போதைப்பொருள்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போா் மீதான நடவடிக்கை, பல்வேறு நிகழ்வுகள், நீதிமன்ற அலுவல்கள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

கடந்த மாதம் சிறப்பாகப் பணியாற்றிய 3 ஆய்வாளா்கள் உள்ளிட்ட 68 காவல் துறையினருக்கு வெகுமதி, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com