கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
Updated on
1 min read

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

நாலாட்டின்புத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வரதம்பட்டி ஊா்ப் பொதுக் கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் உதவியுடன் அந்த சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

விசாரணையில், அவா் வரதம்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த சு. லட்சுமி (73) என்பதும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்ாகவும் தெரியவந்தது. இந்நிலையில், அவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com