கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
நாலாட்டின்புத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வரதம்பட்டி ஊா்ப் பொதுக் கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் உதவியுடன் அந்த சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
விசாரணையில், அவா் வரதம்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த சு. லட்சுமி (73) என்பதும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்ாகவும் தெரியவந்தது. இந்நிலையில், அவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.