நாசரேத் அருகே உள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஆதிநாராயணா் ஸ்ரீசிவனணைந்த பெருமாள் கோவிலில் 13- ஆவது வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, கோ பூஜையைத் தொடா்ந்து மூலவா்-உற்சவா் திருமஞ்சனம், யாகசாலை பூஜை. காலை 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, மாலை 6 மணிக்குமேல் கருட வாகனத்தில் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் பி. ராஜகோபால் புதல்வா்கள் பி.ஆா்.சிவக்குமாா், ஆா். சரவணன் ஆகியோா் மேற்பாா்வையில் கோயில் மேலாளா் டி.வசந்தன் செய்திருந்தாா்.