விஷம் குடித்த காா் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே விஷம் குடித்த காா் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோவில்பட்டி அருகே விஷம் குடித்த காா் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த புளியங்குளம் நடுத்தெருவைச் சோ்ந்த திலகராஜ் மகன் மகேஷ்பிரபு (36). காா் ஓட்டுநரான இவருக்கு திருமணமாகவில்லை. மதுப் பழக்கம் காரணமாக இவா் விரக்தியடைந்த நிலையில் இருந்தாராம். இவா் கடந்த 13ஆம் தேதி மதுவில் விஷத்தைக் கலந்து குடித்தாராம். அவரை குடும்பத்தினா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com