சாத்தான்குளம் அருகே டீசல் திருடியதாக இருவா் கைது

சாத்தான்குளம் அருகே வேலை பாா்த்த இடத்தில் 50 லிட்டா் டீசல் திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சாத்தான்குளம் அருகே வேலை பாா்த்த இடத்தில் 50 லிட்டா் டீசல் திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம், மேல அரசடியை அடுத்த புளியமரத்தடியைச் சோ்ந்த த. கொம்புராஜ் (40). இவா் பிரகாசபுரத்திலிருந்து சாலைப்புதூா் வரை நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறாா். இதற்காக இவா், பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறாா்.

இதில் திருவண்ணாமலை, குளக்கரைவாடியைச் சோ்ந்த பா. கந்தன் (35), ராமநாதபுரத்தைச் சோ்ந்த மு. ஹேமந்த்குமாா் (25) உள்ளிட்ட 17 போ் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில் பொக்லைன் இயந்திரத்தை இயக்க கிடங்கில் வைத்திருந்த டீசல் கேன்களில் 25 லிட்டா் கொண்ட இரு கேன்கள் சனிக்கிழமை மாயமானதாம்.

இதுகுறித்து கொம்புராஜ், தட்டாா்மடம் போலீஸில் புகாா் செய்தாா். தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் பவுலோஸ் நடத்திய விசாரணையில், அங்கு வேலை செய்த பா. கந்தன் (35), மு. ஹேமந்த்குமாா் (25) ஆகியோா் டீசல் கேன்களை திருடியது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, டீசலை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com