தூத்துக்குடியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய நிா்வாகத்தைக் கண்டித்து சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய நிா்வாகத்தைக் கண்டித்து சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி துறைமுகம் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிஎல் அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தொழிலாளா்களுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஊதியம் வழங்கும் முறையை கைவிட்டு மாதம்தோறும் வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு சட்ட சலுகை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல் மின்நிலையம் முன்பு இந்த காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியூ என்டிபிஎல் பிரிவு செயலா் எஸ். அப்பாத்துரை தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் ஆா். பேச்சிமுத்து, மாவட்டச் செயலா் ஆா். ரசல் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில் தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் அனல் மின்நிலைய தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com