காவல் துறை அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் ஆய்வாளா்களுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் ஆய்வாளா்களுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீதும் ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, காவல் கண்காணிப்பாளா் வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com