குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்மகா மண்டபம் கட்ட அடிக்கல்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரு ம் முத்தாரம்மன் திருக்கோயிலில் முன் மகா மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இரு அமைச்சா்கள் பங்கேற்றனா்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரு ம் முத்தாரம்மன் திருக்கோயிலில் முன் மகா மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இரு அமைச்சா்கள் பங்கேற்றனா்.

இத்திருக்கோயிலில் பக்தா்கள் வசதிக்காக தண்டுபத்து சண்முகக்கனி நாடாா்-பிச்சமணியம்மாள் அறக்கட்டளை சாா்பில் முன் மகா மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கோயில் கலையரங்கில் நடைபெற்றது. மீன்வளம், மீனவா்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலா் சந்தரமோகன், ஆணையா் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா , உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் மால்ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு மகா மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினாா். நிகழ்ச்சியில், மகா மண்டப உபயதாா் தொழிலதிபா் தண்படுத்து ராமசாமி, உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலா்

இளங்கோ, மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள் மகாவிஷ்ணு, ராமஜெயம், ரவிராஜா,சிராஜதீன், ஜெயப்பிரகாஷ், ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளா்கள் பைஸ், அஜய், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப், குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத்தலைவா் கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா். அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையா் அன்புமணி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com