கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டியில் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மூப்பன்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் குணால்(22). இவா், தனது பைக்கை வீட்டிற்கு அருகேயுள்ள மாடசாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நிறுத்திவிட்டு சென்றாராம். பின்னா், அவா் செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது பைக்கை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.