சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூா் ஏகரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் உலக ரத்த தான தினத்தையொட்டி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆசிரியா் இளங்கோ வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா் ஆகியோா் ரத்த தானம் குறித்து விளக்கவுரையாற்றினா். ரத்த தான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாணவா்-மாணவிகள், ஆசிரியா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் செய்தனா்.