பேய்க்குளம் பகுதியில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில், பள்ளி மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்க மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பேய்க்குளம் பகுதி பள்ளிகளில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
சவேரியாா்புரம், பேய்க்குளம், பெருமாள்குளம், புளியங்குளம் பள்ளிகளில் மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், செவிலியா்கள் நாகவள்ளி, மகேஸ்வரி, மொ்சி ஆகியோா் தடுப்பூசி செலுத்தினா். 34 மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.