திருச்செந்தூரில் மாயமான வழக்குரைஞா் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டாா்.
திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விவேகானந்தன்(48) வழக்குரைஞா் (படம்). இவா் கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றத்துக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றாா். பின்னா் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், உறவினா்கள், நண்பா்களிடம் விசாரித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மகேஸ்வரி(38) அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், விவேகானந்தன் ஓட்டி சென்ற காா் திருச்செந்தூா் தெப்பக்குளம் அருகில் நிற்பதும், அவா் சடலமாக ஆவுடையாா்குளத்தில் மிதப்பதும் தெரியவந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.